உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை கொன்று உடல் கிணற்றில் வீச்சு

Published On 2023-08-12 06:28 GMT   |   Update On 2023-08-12 06:28 GMT
  • அலங்காநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடல் கிணற்றில் வீசினார்.
  • எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 1 மணி நேரம் போராடி கயிற்று கட்டிலை கிணற்றில் இறக்கி சடலத்தை மீட்டனர். தொடர்ந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபு ணர்கள் வரவ ழைக்கப்பட்டு பரிசோதனை நடந்தது.

அப்போது இளம்பெண் கால்கள் மற்றும் இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பிரேதத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. அவரை அடையாளம் காண அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன புகார் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம் பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News