இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
- மதுரை ரெயில் நிலையம் எதிரே இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
- ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு இடையேயான பிரச்சினையை மெத்தனமாக கடைபிடிக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிர்வாகத்தை கண்டிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள அரசு பொது இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு இன்று இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் மதுரை மண்டல கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புஷ்பராஜன், கண்ணன், மணிமாறன், உமாசங்கர் ஆகியோர் கோரிக்கையகளை வலியுறுத்தி பேசினார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பிரச்சினையில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதை கைவிட வேண்டும்.
ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு இடை யேயான பிரச்சினையை மெத்தனமாக கடைபிடிக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிர்வாகத்தை கண்டிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் வெறிச்சோடியது.