உள்ளூர் செய்திகள்

மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு அலுவலகம் திறப்பு

Published On 2023-11-25 09:06 GMT   |   Update On 2023-11-25 09:06 GMT
  • மதுரையில் எஸ்.பி.ஐ. கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
  • கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரையில் எஸ்.டிபி.ஐ. கட்சி சார்பில் ஜன.7-ந் தேதி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது, இதை முன்னிட்டு கோரிப்பா ளையம் பகுதியில் மாநாட்டு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநில செயலாளர் அபு பக்கர் சித்திக் தலைமை தாங்கி னார்.

மாநில பொதுச் செயலா ளர் நஸ்ரூதீன், செயலாளர் நஜ்மா பேகம், செயற்குழு உறுப்பினர்ஷபீக் அகமது, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார், உமன்ஸ் இந்தியா மூவ் மெண்்ட் மாநில தலைவர் ஃபாத்திமா கனி வாழ்த்தி பேசினார்.

மாநாட்டு அலுவலகத்தை மாநில பொதுச் செயலாளர், மாநாட்டு குழு தலைவர் நிஜாம் முகைதீன், மாநில பொதுச் செயலாளர் அகமது நவ்வி ஆகியோர் திறந்து வைத்தனர்.

முடிவில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் நன்றி கூறினார்.

இதில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News