உள்ளூர் செய்திகள்

வீடு இடிந்து கிடக்கும் காட்சி.

திருமங்கலம்: வீடு இடிந்து ஒருவர் காயம்

Published On 2022-07-31 07:57 GMT   |   Update On 2022-07-31 07:57 GMT
  • திருமங்கலம் அருகே வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம் அடைந்தார்.
  • திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்களாக மழை பெய்து வருகிறது.

திருமங்கலம்

திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(57).

இவருடைய மனைவி சாந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நாகராஜூக்கு 2 வீடுகள் உள்ளது. அம்மாபட்டி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் ஆட்டு குட்டிகளை அடைத்து மற்றொரு வீட்டில் நாகராஜ் தூங்கி கொண்டிருந்தார்.

திடீரென்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் நாகராஜின் வலது கால் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை அதே ஊரைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News