உள்ளூர் செய்திகள்

விபத்தில் இறந்த வீரணன்.

விபத்தில் காவலாளி சாவு

Published On 2023-01-06 08:02 GMT   |   Update On 2023-01-06 08:02 GMT
  • வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியபோது நிலைதடுமாறி காவலாளி பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவ கத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு பணிக்கு சென்றிருந்த வீரணன் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு உறவி னர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீரணன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

மறவன்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. அப்போது வீரணன் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டில் தவறி தலைகுப்புற விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வீரணன் சம்பவ இடத்திலயே பரிதாப மாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News