உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2022-08-25 07:24 GMT   |   Update On 2022-08-25 07:24 GMT
  • எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
  • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி நகரில் உள்ள சகாய பள்ளியில் கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்றவர்க ளுக்கு கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மற்றும் பள்ளி தாளாளர் ஜோசப், தலைமையாசிரியர் ரஞ்சி ரூபிணி மற்றும் எம்.டி. சமுதாய அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ஜெரினா செய்திருந்தனர்.

Tags:    

Similar News