உள்ளூர் செய்திகள்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உண்ணாவிரதம்
- மேலூர் அருகே இந்திய கூட்டணி கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
- மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடந்தது.
மேலூர்
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க கோரி மேலூர் அருகே உறங்கான்பட்டியில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைரவன், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, சுண்ணாம்பூர் பாண்டி, கொட்டாணிபட்டி செல்லையா, வைரமணி, அங்கு பிள்ளை மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் கண்ணன், மணவாளன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் மெய்யர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.