உள்ளூர் செய்திகள்

கோவில் நிலத்தில் 4 ஏர் பூட்டி விவசாயிகள் மாடுகளை வைத்து உழவு செய்தனர். 

திருப்பரங்குன்றம் கோவில் நிலத்தில் ஏர் பூட்டி உழவு செய்த விவசாயிகள்

Published On 2023-04-14 10:07 GMT   |   Update On 2023-04-14 10:07 GMT
  • திருப்பரங்குன்றம் கோவில் நிலத்தில் ஏர் பூட்டி உழவு செய்த விவசாயிகள்.
  • இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.

திருப்பரங்குன்றம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரம ணிய சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப் பட்டது.

மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சித்திரை திருநாளான இன்று திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி இன்று விவசாயம் செழிக்க வேண்டி தார் குச்சியில் பூச்சூடி திருப்பரங் குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலத்தில் உழுது சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கிரிவலமாக வந்து மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குகை கோயில் பகுதியில் விவசாயி கள் அனைவரும் அமர்ந்து இந்த ஆண்டுக்கான விவ சாய கூலியை நிர்ணயம் செய்தனர்.

தங்களது பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினை களை பேசி தீர்த்தனர். தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கிரிவலம் சுற்றி கோவில் வாசலில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News