உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி சாவு

Published On 2022-12-10 07:49 GMT   |   Update On 2022-12-10 07:49 GMT
  • மதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
  • இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை உத்தப்பநாயக்கனூரை அடுத்த திம்மநத்தத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவருக்கு மனைவி பிரேமா உள்ளார். விவசாயியாக வேலை பார்த்து வந்த ரஞ்சித்குமார் சம்பவத்தன்று மதியம் கொப்பிலிப்பட்டி தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கி விழுந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News