உள்ளூர் செய்திகள்

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு:அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடட்டம்

Published On 2023-03-30 08:47 GMT   |   Update On 2023-03-30 09:54 GMT
  • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
  • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருமங்கலம்

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தேவர் திடலில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் வக்கீல் அன்பழகன், நகர செயலாளர் விஜயன், மாவட்ட பேரவைச் செயலாளர் சாத்தங்குடி தமிழழகன், மாவட்ட மீனவரணி செயலாளர் சவுடார்பட்டி சரவணபாண்டி, வர்த்தகர் பிரிவு செயலாளர் சதீஸ் சண்முகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் கரடிக்கல் ஆண்டிச்சாமி, மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் சிங்கராஜ் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம்.பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, பேரவை பாண்டி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசுவரன், காளி, நிர்வாகிகள் சாமிநாதன் கோடீஸ்வரன் செக்கானூரணி சிவன்காளை, காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News