உள்ளூர் செய்திகள்

தி.மு.க. வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

Published On 2023-08-07 05:22 GMT   |   Update On 2023-08-07 05:22 GMT
  • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
  • அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்றார்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொகுதி மேலிட பார்வையாளர் சம்பத், வடக்கு மாவட்ட அவை தலைவர் பாலசுப்பி ரமணியன், ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ், பரந்தா மன், பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தையன், சோமசுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் மூர்த்தி, கலந்து கொண்டு முகவர்கள் முன்னிலையில் பேசியதா வது:-

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளு மன்ற தொகுதியில் தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். வருகின்ற 17-ந் தேதி ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு பங்கேற்க வேண்டும். பூத் கமிட்டியில் உள்ளவர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

கூட்டத்தில் நகர் செய லாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, பேரூ ராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், ஜெ யராமன், துணை தலை வர்கள் சுவாமிநாதன், கார்த்திக், மாவட்ட தொண்ட ரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்தி கேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, தனிச்சியம் மருது, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஸ், பொறியாளர் அணி ராகுல் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News