உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-17 08:58 GMT   |   Update On 2023-05-17 09:03 GMT
  • சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க வேண்டும்.

மதுரை

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்கவும், இங்கு சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லூர்து, அருட்தந்தையர்கள் பெனடிக் பர்னபாஸ், லாரன்ஸ் ஆகியோர் பேசினர்.

இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News