உள்ளூர் செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவருக்கு வெட்டு

Published On 2022-08-09 09:31 GMT   |   Update On 2022-08-09 09:31 GMT
  • சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாளால் வெட்டினர்.
  • இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மதுரை

கருப்பாயூரணி நொண்டி கோவில் தெரு மூர்த்தி மகன் பரத்வஜன் (வயது 23). இவர் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் காளவாசலை சேர்ந்த ஷீபா என்பவருக்கும் திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பரத்வஜன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பரத்வஜன் ஆண்டார் கொட்டாரம் மலைப்பகுதிக்கு வந்தார். அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டினர்.

இதில் பரத்வஜனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கருப்பா யூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News