உள்ளூர் செய்திகள்

கொரோனா வார்டு அமைப்பு

Published On 2022-12-28 07:50 GMT   |   Update On 2022-12-28 07:50 GMT
  • மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
  • கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

மதுரை

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடந்தது.

நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது அவர்களை எப்படி அணுக வேண்டும்? நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, சிகிச்சைக்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், முழுக்கவசம் ஆகியவற்றின் இருப்பு நிலவரம் குறித்து டீன் ரத்னவேல், மருத்துவக் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.

அந்த சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் டீன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது தற்போது ஜீரோ நிலையில் உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

Tags:    

Similar News