உள்ளூர் செய்திகள்
கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றம்
- கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் நாளை (23-ந்தேதி) கூட்டுறவுத்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொட்டாம்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதால், கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, அன்று மாலை 3 மணியளவில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
இந்த தகவலை மதுரை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.