உள்ளூர் செய்திகள்

கட்டுமான தொழிலாளி தவறி விழுந்து சாவு

Published On 2022-06-14 15:00 IST   |   Update On 2022-06-14 15:00:00 IST
  • மதுரையில் கட்டுமான தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
  • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

செல்லூர், போஸ் வீதியை சேர்ந்தவர் குரு (55). கட்டிடத் தொழிலாளி. நேற்று மாலை இவர் தாகூர்நகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலையில் ஈடுபட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News