உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வங்கி மேலாளர் பலி

Published On 2023-02-28 07:56 GMT   |   Update On 2023-02-28 07:56 GMT
  • மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வங்கி மேலாளர் பலியானார்.
  • இவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளது.

அவனியாபுரம்

மதுரை அவனியாபுரம் கிளாட்வே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கிரண்குமார். இவர் அவனியாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று வழக்கம்போல் வீட்டிலிருந்து வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அவனியாபுரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வைக்கம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தார். அவரது மோட்டார் சைக்கிள் கிரண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கிரண்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடி யாக அவர் அவனியாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான கிரண்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாதம் ஆன கைக்குழந்தையும் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

Tags:    

Similar News