உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்

Published On 2023-04-25 06:55 GMT   |   Update On 2023-04-25 06:55 GMT
  • சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடங்கியது.
  • 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு யாகபூஜை நடந்தது.

சோழவந்தான்

சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு யாகபூஜை நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, குப்புசாமி, செயல்அலுவலர் இளமதி ஆகியோர் முன்னிலையில் இவ்வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் ஜவகர்லால் கொடி ஏற்ற பொருட்களை எடுத்து வந்தார்.

மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News