உள்ளூர் செய்திகள்

12 பவுன் நகை திருடிய கார் டிரைவர் கைது

Published On 2022-09-22 09:32 GMT   |   Update On 2022-09-22 09:32 GMT
  • மின் வாரிய அதிகாரி தங்கை வீட்டில் 12 பவுன் நகை திருடு போனது.
  • இந்த சம்பவம் தொடர்பாக மதுரை கார் டிரைவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

மதுரை

மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பாண்டியன் மின்வாரிய அதிகாரி. இவரது தங்கை செல்வநயகி. இவர் மதுரை பரசுராமன்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவரது காரில் வீட்டுக்கு பொருட்களை ஏற்றி சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை காணவில்லை.

இதுபற்றி திருத்தங்கல் போலீசில் சண்முகப்பாண்டியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்தான் நகையை திருடியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News