பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றபோது எடுத்த படம்.
சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் மனுக்கள் பெறும் முகாம்
- சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
- வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன் உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் கிராம பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது .
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சியில் நடந்த சிறப்பு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் தலைமை ஏற்று கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தோட்டக் கலை மாரிச்செல்வம், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா மனுக்கள் பெற்றுக் கொண்டார். கிராம நிர்வாக அலுவலர் பழனி, துணைத்தலைவர் சித்ராதேவி, ஊராட்சி செயலாளர் முனியாண்டி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் மனுக்களை பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் பிரியா சேகர், ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தென்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார் துணைத்தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனியராஜ். கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், கால்நடை ஆய்வாளர் ஜெயராமச்சந்தி ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
வாடிப்பட்டி யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சை மணி, ஊராட்சி செயலாளர் மனோபாரதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாக ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன், துணைத் தலைவர் பாக்கியம் செல்வம், ஊராட்சி செயலா ளர் திருச்செந்தில் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன், ஊராட்சி செயலாளர் ஒய்யனன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
இதேபோல் மேலக்கால், திருவேடகம், நெடுங்குளம், திருவாளவாயநல்லூர், சித்தாலங்குடி, சி.புதூர், ரிஷபம், குருவித்துறை ஆகிய ஊர்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த முகாமில் வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன், குடிநீர் குழாய் இணைப்பு உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனு கொடுத்தனர்.