உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியலில் உள்ள கைரேகைகளை தடயவியல் நிபுணர் சேகரித்தபோது எடுத்த படம்.

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

Published On 2022-06-27 07:35 GMT   |   Update On 2022-06-27 07:35 GMT
  • விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருடப்பட்டுள்ளது.
  • இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஜி.எஸ்.டி. சாலை யில் விபூதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று காலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர். கோவில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே 2 முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடந்துள்ளது. இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News