- கதவை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
- டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுநகரை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது 36). கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.
ஏல சீட்டு வசூல் செய்த பணம் மற்றும் காலி மனையிடம் வாங்குவதற்காக உறவினர்களிடம் கடனாக வாங்கிய பணம் உட்பட ரொக்க பணம் ரூ.35 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.கடந்த 10 -ந் தேதி ஜெயந்தி திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றார். இதனால் கடந்த 5 நாட்களாக வீடு பூட்டியிருந்தது.
இந்த நிலையில் வீட்டின் மாடியில் வசிப்பவர்கள் இன்று காலை வீட்டின் பின்புறம் பார்த்த போது ஜெயந்தி வீட்டின் பின்பக்க வாசல் திறந்து கிடப்பதை கண்டு ஜெயந்திக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஜெயந்தி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.35 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு செய்து கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொ ள்ளப்பட்டது. மோப்பநாய் வீட்டின் அருகில் உள்ள தெரு வழியாக கண்மாய் பகுதி நோக்கி சென்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ரூ.35 லட்சத்தை திருடிய கொள்ளையர்களை பிடிக்க ேபாலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.