உள்ளூர் செய்திகள்

மூலிகை பண்ணை அமைக்க பூமி பூஜை

Published On 2022-08-24 07:45 GMT   |   Update On 2022-08-24 07:45 GMT
  • மூலிகை பண்ணை அமைக்க பூமி பூஜை நடந்தது.
  • யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டாப்ப நாயக்கனூர் ஊராட்சியில் உள்ள குன்னூத்துப்பட்டியில் மதுரை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ மூலிகை பொருட்கள் பண்ணை அமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது.

யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணைத்தலைவர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.

வேளாண்மை ஆத்மா குழு தலைவர் சுதந்திரம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் உதயகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சிவசங்கர், உசிலம்பட்டி யூனியன் ஆணையாளர் கண்ணன், வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் மகேந்திரன், உயிரியல் தொழில்நுட்பத் துறை ரேணுகா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News