உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பா.ஜ.க.வினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

Published On 2022-12-09 13:43 IST   |   Update On 2022-12-09 13:43:00 IST
  • போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாலை மறியலை கைவிட்டனர்.

அவனியாபுரம்

மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் அம்பேத்கர் சிலையை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிலைக்கு மாலை அணி விக்க மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அங்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தி பா.ஜ.க. கொடி இல்லாமல் செல்ல வேண்டும் என்று கூறினர். இதனால் இரு கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் கட்சி கொடி இல்லாமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம் என கேட்டனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு நாளை நேரம் தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் மேற்கு மாவட்ட தலைவர் சசி குமார், வேல்முருகன், சுப.நாகராஜன், சடாச்சரம், வெற்றிவேல், முருகன் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அதே வேளையில் பா.ஜ.க.வினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சாலை மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News