உள்ளூர் செய்திகள்

சங்கீத கலாநிதி பக்தவத்சலத்திற்கு பாராட்டு விழா

Published On 2023-11-18 08:44 GMT   |   Update On 2023-11-18 08:44 GMT
  • சங்கீத கலாநிதி பக்தவத்சலத்திற்கு பாராட்டு விழா நடந்தது.
  • விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.

மதுரை

மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி.திருமண மண்டபத்தில் அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் மதுரை குமர கான சபா டிரஸ்ட் இணைந்து கர்நா டக இசை நிகழ்ச்சி மற்றும் சங்கீத வித்வான்களுக்கு பாராட்டு விழா நடத்தியது.

ராமநாதபுரம் கலை மாமணி சி.எஸ்.சங்கரசிவம், சங்கீத வித்வான்கள் சீனிவாசா ஐயர், மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ.சி.எஸ். முருக பூபதி ஆகியோர் நினைவாக சங்கீத கலாநிதி விருது பெற்ற கலை மாமணி திருவாரூர் பக்தவத் சலத்திற்கு பாராட்டு விழா தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து திருவாரூர் எஸ்.கிரீஸ் அவர்களுக்கு குமரகான இசை மணி விருது வழங்கப்பட்டது.

திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம், எஸ்.கிரீஷ் பாட்டு, புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் வயலின், ஆலத்தூர் ராஜ் கணேஷ் கஞ்சிரா உள்ளிட்ட இசை கலைஞர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் சத்குரு சங்கீத வித்யாலயம் இசை கல்லூரி முதல்வர் தியாக ராஜன் முன்னாள் முதல்வர் லதா வர்மா, பேங்க் ஆப் பேங்க் ஆப் பரோடா மேலாளர்கள் பிரபாகரன் ராமமூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் மதுரை குமர கான சபா ட்ரஸ்ட் முனைவர் லஷ்மண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News