உள்ளூர் செய்திகள்
அழகி நாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- அலங்காநல்லூர் அருகே அழகி நாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, துணை சேர்மன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை நிர்வாககுழு தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் பொருசுப்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.