உள்ளூர் செய்திகள்

வாலிபர்-இளம்பெண் தற்கொலை

Published On 2023-08-01 13:29 IST   |   Update On 2023-08-01 13:29:00 IST
  • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
  • அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை ராஜாக்கூர் அப்பார்ட்மெண்ட் பகுதி யை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் காளீஸ்வரன் (23). இவருக்கும், இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று புதூர் பஸ் நிலைய பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து காளீஸ்வரனின் தாய் தேவி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்

அண்ணா நகர் கோமதிபுரம் ஆவின் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி முத்துமாரி (28). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வசித்து வந்தனர். இதன் காரணமாக முத்துமாரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News