உள்ளூர் செய்திகள்

ஜமாத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2023-03-13 09:17 GMT   |   Update On 2023-03-13 09:17 GMT
  • ஜமாத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்பு வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  • ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தொண்டி வடக்கு தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். ஜமாத் மக்கள் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை வக்பு வாரியத்துக்கு அனுப்பி யுள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து வக்பு வாரியம் வருகிற 23-ந்தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News