உள்ளூர் செய்திகள்

வங்கிகளில் ரூ.2,000 நோட்டுக்களை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வேண்டும்- பசும்பொன் பாண்டியன்

Published On 2023-05-22 09:16 GMT   |   Update On 2023-05-22 09:16 GMT
  • வங்கிகளில் ரூ.2,000 நோட்டுக்களை செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
  • ரூ.2000 நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால் வீடு மற்றும் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வைத்தி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரிசர்வ் வங்கியின் அறி விப்பை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்று வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட மறு நிமிடமே அனைத்துக் கடைகள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க் மற்றும் அரசு போக்கு வரத்துக்கழகம் உட்பட மதுபார், வணிக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகளை வாங்குவது இல்லை என்று முடிவு செய்து விட்டனர்.

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறும் முடிவு களை எடுக்கும் போது மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். இந்த தெளிவற்ற, திட்டமிடாத அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்படு வதை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி தெளிவான விளக்க மான அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

இந்த பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 6 மாத காலம் ரூ.2000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News