உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே 2 பெண்கள் தற்கொலை

Published On 2023-02-03 05:59 GMT   |   Update On 2023-02-03 05:59 GMT
  • திருமங்கலம் அருகே 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகம், அம்பட்டையன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியில் இருந்த சிவரஞ்சனி இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த சிந்து பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக உசிலம் பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவரஞ்சனி தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட தூம்பக் குளம் முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி தேவி(55). இவர் களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகளாக தேவிக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர், தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News