உள்ளூர் செய்திகள்

கொலையுண்ட ரவி

ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

Published On 2022-09-05 08:13 GMT   |   Update On 2022-09-05 08:13 GMT
  • அலங்காநல்லூர் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
  • அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர்

மதுரை பெத்தானியா புரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 29), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா(24). ரவி கடந்த ஒரு வருடமாக கோவில்பாப்பாக்குடியில் வசித்து வந்தார். அவர் அங்கு சிலருடன் நட்பாக பழகி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ரவி கோவில்பாப்பாக்குடி பகுதியில் இருந்தபோது ஒரு கும்பல் வந்தது.

அவர்கள் ரவியிடம் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், மருதமுத்து ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி னர்.

எதற்காக ரவி கொலை செய்யப்பட்டார்? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் ஈடுபட்ட நபர்கள் யார்?யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்ேடா டிரைவர் ரவியை கொலை செய்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரவியை அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News