உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-11-18 05:41 GMT   |   Update On 2022-11-18 05:41 GMT
  • பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • அவர்களிடம் இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருமங்கலம்

பேரையூர் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது41), லட்சுமிபுரம் பெருமாள் (55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஞான பிரகாசத்தின் கடைக்கு புகையிலை பொருட்களை இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம்இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News