உள்ளூர் செய்திகள்

மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு

Published On 2023-05-27 08:26 GMT   |   Update On 2023-05-27 08:26 GMT
  • மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்டது.
  • நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை கே.கே.நகர் மானகிரி 5-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது37). இவர் மொபட்டில் அண்ணாநகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர்.

அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News