உள்ளூர் செய்திகள்
- காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், கருப்பனூர் பகுதியை சேர்ந்தவர் வாட்டர் வாஜித். இவர் தனியார் நிறுவனத்தில் வேைல பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகே யுள்ள முஸ்லிம் கொட்டாய் பகுதியில் மசூதியில் உருசு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வாட்டர் வாஜித் சொகுசு காரில் வந்தார். பின்னர் அவர் மசூதிக்குள் சென்று விட்டு வெளியே வந்து பார்த்த போது காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.