குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
- 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டு படகுகள் உள்ளது.
- நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
பேராவூரணி:
வங்கக்கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர்சிவகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
துறைமு கத்தில் பாதுகா ப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளன.
மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.
கொள்ளுக்காடு புதுப்பட்டினம், மல்லிப ட்டினம், பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மந்திரிபட்டினம், செம்பியன் மாதேவிபட்டினம், அண்ணாநகர் புது தெரு, கணேசபுரம் உள்ளிட்ட 32 மீனவ கிராமங்களில் 1000 நாட்டுப் படகுகள் உள்ளது.
விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று சனிக்கிழமை 3 -வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5000 பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.