உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கூடலூர் அருகே லாட்டரி கடத்தியவர் கைது

Published On 2022-08-14 05:20 GMT   |   Update On 2022-08-14 05:20 GMT
  • லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
  • ரூ.1,86,400 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கூடலூர்:

கூடலூர் அருகே குமுளி தமிழக பஸ்நிலைய பகுதியில் லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்த போது குமுளியில் இருந்து தமிழக பகுதிக்கு லாட்டரி கடத்தியது தெரியவந்தது.

மேலும் அந்த நபர் அனுமந்தன்பட்டியை சேர்ந்த திவாகரன்(22) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து ரூ.1,86,400 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். லாட்டரி சீட்டு தமிழகத்தில் விற்பது குற்றமாகும்.

மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News