உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

Published On 2023-01-14 09:24 GMT   |   Update On 2023-01-14 09:24 GMT
  • 6-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது.
  • அந்த 2 நாட்களும் தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினமும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினமும் கொண்டா–டப்படுகிறது.

எனவே அந்த 2 நாட்களும் தஞ்சை மாவட்டத்தில் இயங்கு வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News