உள்ளூர் செய்திகள்

மதுபார்களில் சோதனை நடத்திய அதிகாரி.

தேனி அருகே மதுபான பார்களுக்கு சீல் வைத்த அதிகாரி

Published On 2022-07-13 10:59 IST   |   Update On 2022-07-13 10:59:00 IST
  • தேனி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைக்கு அருகில் இருந்த மதுகூடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
  • அனுமதி பெறாமல் நடத்தி வந்த 11 மதுபார்களுக்கு சீல் வைத்தனர்.

தேனி:

மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலா ளர் தலைமையில் 3 குழுவி னர் தேனி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைக்கு அருகில் இருந்த மதுகூடங்க ளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அனுமதி பெறாமல் நடத்தி வந்த 11 மதுபார்களுக்கு சீல் வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வண்ணம் மறு ஒப்பந்தத்தில் அதிகபடியான மது கூட ங்களை எடுத்து முறையாக அரசு அனுமதி பெற்று மது கூடங்கள் நடத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News