உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி சுற்று சுவர் கட்டும் பணியை நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அடிக்கல் நாட்டினார்.

அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு் விழா

Published On 2022-06-26 10:18 GMT   |   Update On 2022-06-26 10:18 GMT
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்புறம் இருந்த சுற்றுச்சுவர் கஜா புயலில் சேதம் அடைந்தது.
  • திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்புறம் இருந்த சுற்றுசுவர் கஜா புயலில் சேதம் அடைந்தது.

இதையடுத்து மாரிமுத்து எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைக்க ஒதுக்கீடு செய்தார்.

இதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர்சுந்தர், வழக்கறிஞர் அருள்செல்வன், தாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News