அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கம் தொடக்கம்
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
- மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரச்சாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் வி.எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாக ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட நிர்வாகிகள் எம்.மேகநாதன், எஸ்.துர்க்காம்பிகா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் து.இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் கண்ணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.ஜி.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் ப.அருள்விழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார்.