உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சிமஸ்தான் பேசினார். 

ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான்பங்கேற்பு

Published On 2022-07-15 08:41 GMT   |   Update On 2022-07-15 08:41 GMT
  • செஞ்சியில் மக்கள் நல பணியாளர்கள், ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்.
  • புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

விழுப்புரம்:

செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார் .சிறுபான்மையினர் நலத் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதியதாக பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஏரி பாசன சங்க நிர்வாகிகளுக்குஅமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் களுடைய பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் .கேசவலு வரவேற்றார் இதில்செஞ்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் ஒன்றிய செயலாளர்கள் செஞ்சிவி ஜயராகவ ன்மேல்மலையனூர் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்மந்தம் மற்றும்ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்மக்கள் நல பணியாளர்கள் மற்றும் ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News