உள்ளூர் செய்திகள்

மேல்பட்டாம்பாக்கத்தில் ரெயில் பாதை பகுதியில் காயங்களுடன் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி: போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-06-25 07:49 GMT   |   Update On 2023-06-25 07:49 GMT
  • சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர்.
  • இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது.

கடலூர்:

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையம் பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் கடலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர். இதில் அவர் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் (வயது 42). கூலித் தொழிலாளி என்பது தெரிவந்தது.

தொடர்ந்து அங்கு வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது. எனவே, இது குறித்து வழக்கு பதிவு செய்து எங்களால் விசாரிக்க முடியாது. நெல்லிக்குப்பம் போலீசார்தான் விசாரிக்க வேண்டுமென கூறினர். அதன்படி, இறந்து கிடந்த வடிவேலுவின் உடலை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன வடிவேலு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இவரை யாரேனும் கொலை செய்து ரெயில்வே பாதை அருகில் வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News