உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2022-11-09 14:00 IST   |   Update On 2022-11-09 14:00:00 IST
  • செல்வலிங்கம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
  • பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் செல்வலிங்கம் ( வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார்.

லாரி மோதியது

மறவன்மடம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News