உள்ளூர் செய்திகள்

கூலித் தொழிலாளி தற்கொலை

Published On 2023-03-30 15:28 IST   |   Update On 2023-03-30 15:28:00 IST
  • அடிக்கடி மது போதையில் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
  • மனவிரக்கியில் அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள தோக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி .இவருடைய மகன் லாரன்ஸ் (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது . இதனால் அடிக்கடி மது போதையில் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மனவிரக்கியில் அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News