உள்ளூர் செய்திகள்

லாரி மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2023-03-09 15:27 IST   |   Update On 2023-03-09 15:27:00 IST
  • ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது.
  • இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காரவல்லி பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது37). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News