உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
தேனி அருகே மது பழக்கத்தால் தொழிலாளி தற்கொலை
- மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
- மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(48). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த மாரிச்செல்வம் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.