உள்ளூர் செய்திகள்

குழித்துறை நகராட்சி அதிகாரிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை

Published On 2025-08-11 11:16 IST   |   Update On 2025-08-11 11:16:00 IST
  • பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
  • கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

மார்த்தாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி அதிகாரிகளுடன் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெய்வத்திரு வசந்தகுமார் அவர்களின் முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறை மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்ய கேட்டுக் கொண்டார்.

 

மேலும் மார்த்தாண்டம் நகரின் அனைத்து கழிவு நீர்களும் அட்டைகுளம் கால்வாய் வழியாக கொல்லன் குளத்தில் கலப்பது குறித்தும் அட்டைக் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதிகாரிகளுடன் சென்று காந்தி மைதானத்தில் உள்ள கழிப்பறை வசதியை ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் ஜனநாயகத்தை அழிக்க துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஜய் வசந்த் எம்.பி. குரல் கொடுத்தார்.

திருவட்டார் பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி மீதும், தலைவர் ராகுல் காந்தி மீதும் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வசந்த் எம்.பி. வரவேற்றார்.

Tags:    

Similar News