மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- கோவில் அருகில் குண்டங்கள் அமைக்கப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
- விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மெலட்டூர்:
பாபநாசம் அடுத்த மெலட்டூர் அடிச்சேரி தெருவில் மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோ விலில் கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பரம்பரை அறங்காவலர் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் உதவியால் திருப்பணிகள் நடைபெற்றது.
பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபி ஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக கோவில் அருகில் குண்டங்கள் அமைக்க ப்பட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து மூலவர் மாணிக்க விநாயகர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின், விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலசுப்ர மணியன் குடும்பத்தினர் மற்றும் அடிச்சேரி தெரு கிராமமக்கள் செய்திருந்தனர்.