உள்ளூர் செய்திகள்

கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

நிலக்கோட்டையில் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-11-24 07:26 GMT   |   Update On 2023-11-24 07:26 GMT
  • நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
  • முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை தட்சிணமா நாடார் சங்க கருப்பு கட்டி பேட்டையில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

2-வது நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிறைவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News