உள்ளூர் செய்திகள்

முதல் பரிசு வென்ற மாணவனை கல்லூரி முதல்வர் மாதவி பாராட்டினார்.

போட்டியில் முதல் பரிசு வென்ற அரசு கல்லூரி மாணவனுக்கு பாராட்டு

Published On 2023-10-17 10:06 GMT   |   Update On 2023-10-17 10:06 GMT
  • ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
  • முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.

கும்பகோணம்:

பாபநாசம் திராவிடர் சமுதாய நலக்கல்வி அறக்கட்டளை, இமயம் கல்வி சமூகப்பணி அறக்கட்டளை, தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கட்டுரை போட்டிகள் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

போட்டியில் கணினி அறிவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மாதவன் முதல் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

தொடாந்து, பேச்சு போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.

அவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மாதவி பாராட்டி வாழ்த்தினார்.

அப்போது தேர்வு நெறியாளர் சுந்தரராசன், வேதியல் துறை தலைவர் மீனாட்சி சுந்தரம், புவியியல் துறை தலைவர் கோபு, கார்த்தி, சவுந்தர்ராஜன், கல்லூரி நூலகர் சங்கரலிங்கம், கவின் கலை மன்ற பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், விவேகா னந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News